எத்தனையோ தேர்வுகள்
எழுதிவிட்டு
காத்திருந்ததுண்டு
முடிவுக்காக
ஆனால்
இதுபோல் ஒன்றும்
உயிரைப் பிடித்துவைத்து
உலக்கையில்
இடித்ததில்லை
என்னை
கேட்கவைத்து கேட்கவைத்து
நீயும் கூட
தெய்வமாகிப் போனாய்
எதை கொடுக்கப்போகிறாய்
நான்
விதைக்கப்பட நந்தவனமா......
புதைக்கப்பட பாலைவனமா......
No comments:
Post a Comment